General29 July 2026

12 ஆவது மாடியில் இருந்து பூனையைத் கீழே தள்ளிவிட்ட நபர்: சமூக வலைதளங்களில் கொந்தளிப்பும், வழக்கும்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியிருப்பு ஒன்றின் 12-வது மாடியிலிருந்து பூனையைத் கீழே தள்ளிய நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து, கட்டிடத்தின் குழாய்ப் பகுதியின் கைப்பிடிச் சுவரிலிருந்து குறித்த நபர் பூனையைத் கீழே தள்ளும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது கடந்த திங்கட்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் இந்தச் செயலால் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் நல அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes