திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவியின் குடும்பத்தினரிடம் சிங்கள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.
அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞரொருவரே இந்த நற்செயலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த குறித்த இளைஞன் , அங்கு குரங்கொன்றின் கையில் கைப்பேசி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். உடனடியாக குரங்குடன் போராடி அந்த கைபேசியை அவர் மீட்டுள்ளார்.
விசாரணையில், கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, மாணவி ஒருவரின் கைப்பேசியை குரங்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
மாணவியின் கல்விசார் மிக முக்கியமான பல தகவல்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையைப் பயன்படுத்தி உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அவர், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பங்குபற்றுதலுடன், நேற்று (28) பிற்பகல் கிளிநொச்சியில் குறித்த மாணவியின் தந்தையிடம் அதனை வெற்றிகரமாக ஒப்படைத்துள்ளார்.
மத நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞரொருவரே இந்த நற்செயலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த குறித்த இளைஞன் , அங்கு குரங்கொன்றின் கையில் கைப்பேசி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். உடனடியாக குரங்குடன் போராடி அந்த கைபேசியை அவர் மீட்டுள்ளார்.
விசாரணையில், கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, மாணவி ஒருவரின் கைப்பேசியை குரங்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
மாணவியின் கல்விசார் மிக முக்கியமான பல தகவல்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையைப் பயன்படுத்தி உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அவர், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பங்குபற்றுதலுடன், நேற்று (28) பிற்பகல் கிளிநொச்சியில் குறித்த மாணவியின் தந்தையிடம் அதனை வெற்றிகரமாக ஒப்படைத்துள்ளார்.
மத நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: தேசிய பாதுகாப்பை கருதி சாட்சிய விவரங்களை வெளியிடத் தடை
Local
30 July 2026
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை – ஆபத்தில் இலட்சக்கணக்கான மக்கள்
Local
30 July 2026
மதுபான விலை உயர்வுக்கு மத்தியிலும் மதுவரி வருவாய் அதிகரிப்பு
Local
30 July 2026
குற்றங்களை கண்டறிந்த காவல் நாய்களுக்கு புதிய உரிமையாளராகும் வாய்ப்பு
Local
30 July 2026
நடிகர் கவின் வீட்டில் இரட்டை மகிழ்ச்சி : திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து!
Local
30 July 2026
ஒரு தந்தையாக என் கடமை... : மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி செய்தி!
Local
30 July 2026
ஹரக் கட்டா உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பயங்கரவாதத் தடுப்புச் சட்ட கீழான வழக்கை முன்னகர்த்த முடியாது – நீதிமன்றம் உத்தரவு
Local
30 July 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் நியமனம்!
Local
30 July 2026
நீர்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
30 July 2026
நாசா செயற்கைக்கோள் படப்பிடிப்பில் சிக்கிய விசித்திரம் : விஞ்ஞானிகளின் அவசர எச்சரிக்கை!
Local
30 July 2026