அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து 400 தோள்பட்டையில் வைத்து இயக்கும் குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட ஏவுகணைகள் அடுத்த சில வாரங்களில் ஈரானைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா தயாரிப்பான QW-12 மற்றும் FN-16 ரக ஏவுகணைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கு வழங்கப்படவுள்ளதுடன், ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட இடைத்தரகு நிறுவனம் மூலமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவை குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை இலக்கு வைத்துத் தாக்கும் திறன் கொண்டவை என்பதுடன், எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தகவல்களைச் சீன வெளியுறவு அமைச்சு முற்றுமுழுதாக மறுத்துள்ளதுடன், இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அமைதியை ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த ஏவுகணைகள் சீனாவிலிருந்து பாகிஸ்தான் வழியே ஈரானுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளைப் பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR திட்டவட்டமாக மறுத்து, அவை பொய் பிரசாரம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, தனது வான் பாதுகாப்பை விரைவாக மறுசீரமைக்க ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட ஏவுகணைகள் அடுத்த சில வாரங்களில் ஈரானைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா தயாரிப்பான QW-12 மற்றும் FN-16 ரக ஏவுகணைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கு வழங்கப்படவுள்ளதுடன், ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட இடைத்தரகு நிறுவனம் மூலமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவை குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை இலக்கு வைத்துத் தாக்கும் திறன் கொண்டவை என்பதுடன், எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தகவல்களைச் சீன வெளியுறவு அமைச்சு முற்றுமுழுதாக மறுத்துள்ளதுடன், இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அமைதியை ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த ஏவுகணைகள் சீனாவிலிருந்து பாகிஸ்தான் வழியே ஈரானுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளைப் பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR திட்டவட்டமாக மறுத்து, அவை பொய் பிரசாரம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, தனது வான் பாதுகாப்பை விரைவாக மறுசீரமைக்க ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
Latest News
சீரற்ற வானிலையால் 5 கடற்றொழிலாளர்கள் பலி; ஒருவரை காணவில்லை!
Local
02 August 2026
131 டெஸ்ட் போட்டிகள், 184 இன்னிங்ஸ்கள்: ஒருமுறை கூட ரன்-அவுட் ஆகாத கபில் தேவின் அசாத்திய சாதனை!
Local
02 August 2026
பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலைக் கைதிகளைப் பார்வையிட வியாழக்கிழமை முதல் மீண்டும் அனுமதி!
Local
02 August 2026
மீண்டும் களத்தில் லியோனல் மெஸ்ஸி - கைநழுவிய வெற்றி
Local
02 August 2026
ஹர்திக் பாண்டியா அணி மாற்றம்? வெளியான அதிரடி தகவல்!
Local
02 August 2026
“பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டுமென அநுரவே கோரினார்”
Local
02 August 2026
15 நாட்களுக்கு முன் நடந்த ரகசியம் வெளிவந்தது : விஜய் மகனை இழுத்துப் பேசிய ரவி மோகனின் மாமியார்!
Local
02 August 2026
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!
Local
02 August 2026