அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து 400 தோள்பட்டையில் வைத்து இயக்கும் குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட ஏவுகணைகள் அடுத்த சில வாரங்களில் ஈரானைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா தயாரிப்பான QW-12 மற்றும் FN-16 ரக ஏவுகணைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கு வழங்கப்படவுள்ளதுடன், ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட இடைத்தரகு நிறுவனம் மூலமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவை குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை இலக்கு வைத்துத் தாக்கும் திறன் கொண்டவை என்பதுடன், எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தகவல்களைச் சீன வெளியுறவு அமைச்சு முற்றுமுழுதாக மறுத்துள்ளதுடன், இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அமைதியை ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த ஏவுகணைகள் சீனாவிலிருந்து பாகிஸ்தான் வழியே ஈரானுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளைப் பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR திட்டவட்டமாக மறுத்து, அவை பொய் பிரசாரம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, தனது வான் பாதுகாப்பை விரைவாக மறுசீரமைக்க ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட ஏவுகணைகள் அடுத்த சில வாரங்களில் ஈரானைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா தயாரிப்பான QW-12 மற்றும் FN-16 ரக ஏவுகணைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கு வழங்கப்படவுள்ளதுடன், ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட இடைத்தரகு நிறுவனம் மூலமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவை குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை இலக்கு வைத்துத் தாக்கும் திறன் கொண்டவை என்பதுடன், எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தகவல்களைச் சீன வெளியுறவு அமைச்சு முற்றுமுழுதாக மறுத்துள்ளதுடன், இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அமைதியை ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த ஏவுகணைகள் சீனாவிலிருந்து பாகிஸ்தான் வழியே ஈரானுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளைப் பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR திட்டவட்டமாக மறுத்து, அவை பொய் பிரசாரம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, தனது வான் பாதுகாப்பை விரைவாக மறுசீரமைக்க ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
Latest News
கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு: லக்சபான நீர்த்தேக்கப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
Local
01 August 2026
தென்மேல் பருவமழை தீவிரம்: 7 மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
01 August 2026
20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு தங்கம்: ருமேஷ் தரங்கவின் சாதனை
Local
01 August 2026
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரக படகுகள் கடலுக்குச் செல்லத் தடை!
Local
01 August 2026
ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது
Local
01 August 2026
நாட்டில் நிலவும் வறட்சி: நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!
Local
01 August 2026
சஜித் நடத்தும் சிறுத்தைகள் தினம்
Local
01 August 2026
மிரிஸ்ஸ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தொடர்ந்தும் மருத்துவமனையில்!
Local
01 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவு: இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சபை ஆதரவு!
Local
01 August 2026
வடக்கு ,கிழக்கு,உட்பட்ட பகுதிகளில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு
Local
01 August 2026