International30 July 2026

ஈரான் மீது ‘கடுமையான தாக்குதல் அலை’: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக நடத்தப்பட்ட "பெரும் தாக்குதல் அலை" நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிவித்துள்ளது.

ஈரானில் அமைந்துள்ள இராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி (Drone) வசதிகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தளங்கள், மற்றும் கடல்சார் திறன்கள் உள்ளிட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) பல இலக்குகளைத் தங்களது படைகள் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள், சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் அண்டை வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைப்பதே இந்தத் தாக்குதல்களின் முதன்மை நோக்கம் என சென்ட்காம் விவரித்துள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் தற்போது பணியில் உள்ள 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மிகுந்த விழிப்புடனும், தாக்குதல் திறனுடனும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் ஆயத்த நிலையிலும் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes