General01 August 2026

மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே அமைதியின்மை

மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வருகைதந்துள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை ஒத்த உரத்த சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, கைதிகளின் நலனை அறிவதற்காக அங்கு வருகைதந்திருந்த உறவினர்கள், பாதுகாப்புப் படையினரின் தடைகளை மீறி முன்னோக்கிச் செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது சூழ்நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் முயன்றதை அடுத்து இரு தரப்பினருக்குமிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பதற்றநிலை மற்றும் கட்டடமொன்றில் பரவிய தீ விபத்து காரணமாக ஒரு கைதி உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 
Related recommendation
Hiru TV News | Programmes