கடந்த சில மணிநேரங்களில் மகாவலி கங்கையின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மகாவலி கங்கை வடிநிலப் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை, உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, கங்க இஹல கோரளே, பஸ்பாகே கோரளே மற்றும் கங்கவட்ட கோரளே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்வான பகுதிகளுக்கு விசேடமாகத் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து, வெள்ள அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் தொடர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Latest News
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு
Local
07 August 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம்
Local
07 August 2026
சிறைச்சாலை மோதல்கள் - ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு
Local
07 August 2026
தனது லயோலா கல்லூரி சிரேஷ்ட மாணவர், தனது வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை
Local
07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!
Local
07 August 2026
சிறைச்சாலைப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்தல்!
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கண்ணீர் புகை பிரயோகம்
Local
07 August 2026
சிறைச்சாலைச் சம்பவங்களின் பின்னணியில் சதித்திட்டம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!
Local
07 August 2026
லலித் – குகன் காணாமற்போன வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி ஊடாக சாட்சியமளிக்க உத்தரவு
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகளின் போராட்டம் தீவிரம்
Local
07 August 2026