கடந்த சில மணிநேரங்களில் மகாவலி கங்கையின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மகாவலி கங்கை வடிநிலப் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை, உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, கங்க இஹல கோரளே, பஸ்பாகே கோரளே மற்றும் கங்கவட்ட கோரளே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்வான பகுதிகளுக்கு விசேடமாகத் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து, வெள்ள அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் தொடர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Latest News
கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
Local
04 August 2026
அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; ஒருவர் காணாமல்போயுள்ளார்
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு - அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026
ஹட்டன் - கினிகத்தேனை வீதி வழமைக்கு
Local
04 August 2026
இலங்கையின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு!
Local
04 August 2026
கொழும்பு - கண்டி பிரதான வீதி மீண்டும் வழமைக்கு
Local
04 August 2026
காவல்துறை மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து - சிக்கலில் சாகர காரியவசம்!
Local
04 August 2026
கொட்டித் தீர்க்கப்போகும் பலத்த மழை - இன்றைய வானிலை அறிக்கை
Local
04 August 2026
ஈரானுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே 'கடைசி வாய்ப்பு' : எச்சரிக்கிறார் ட்ரம்ப் !
Local
04 August 2026
அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்!
Local
04 August 2026