அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், சுமார் 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நூற்றுக் கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
ஸ்போகேன் நகரத்தைச் சுற்றி மூன்று பெரிய காட்டுத்தீ கட்டுப்பாடற்ற முறையில் தொடர்ந்து எரிந்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
"எமது பிராந்தியம் சந்தித்துள்ள மிக மோசமான இயற்கை பேரழிவு இது" என ஸ்போகேன் மேயர் லிசா பிரவுன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வொஷிங்டன் மாநில ஆளுநர் பாப் பெர்குசன் மாநிலம் முழுவதும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கூட்டாட்சி உதவியைக் கேட்டுள்ளதாக மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதுவரை வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட சுமார் 600 கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
மேலும் 10,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சார இணைப்பை இழந்துள்ளனர்.
பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாகத் தீ வேகமாகப் பரவி வருகின்றது.
இதுவரை உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ உறுதி செய்யப்படாத போதிலும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், வெளியேறுமாறு அறிவுறுத்தப்படும் போது உடனடியாக ஒத்துழைக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Latest News
இன்றைய தங்க விலை நிலவரம் : தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
Local
04 August 2026
எங்கள் வீட்டில் சினிமா பேச்சே இல்லை" - குழந்தைகள் குறித்து மனம் திறந்த சூர்யா - ஜோதிகா
Local
04 August 2026
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை
Local
04 August 2026
இலங்கையின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: இந்தியாவின் மெலத்தியன் மருந்து கையளிப்பு!
Local
04 August 2026
"கருத்துக்கு கருத்தால் பதிலளியுங்கள்" - உதயநிதி கைது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடித்தால் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கலாம் - ரஜீவ் அமரசூரிய
Local
04 August 2026
இளம் வயதிலேயே நிரந்தர கருத்தடையைத் தெரிவுசெய்யும் ஆண்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Local
04 August 2026
காவல்துறை பரிசோதகர் ரூ. 5 லட்சம் கையூட்டல் கொடுக்க முயன்றவர் காவல் நிலையத்தினுள்ளேயே கைது!
Local
04 August 2026
மெல்சிரிபுர வீதி விபத்தில் படுகாயமடைந்த 'ரந்தெனியா பண்டார' யானை உயிரிழப்பு!
Local
04 August 2026
சிறைச்சாலை நெருக்கடிக்குத் தீர்வாக வீட்டுக்காவல்: புதிய சட்ட மூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி!
Local
04 August 2026