முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என பிரபல சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா பகிரங்க அறிக்கை ஒன்றினூடாக வலியுறுத்தியுள்ளார்.
குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் அவர் ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் அவர் ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
Latest News
சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
06 August 2026
மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்து!
Local
06 August 2026
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்: ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம்!
Local
06 August 2026
மெக்சிகோவில் டிக்டொக் பிரபலம் நேரலையில் துப்பாக்கிச் சூட்டில் பலி!
Local
06 August 2026
அநுராதபுரத்தில் ஒரேயொரு தமிழ் பாடசாலையின் காணியை பாதுகாக்க பெரும் போராட்டம்!
Local
06 August 2026
புத்தாண்டு அழகி போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண் உட்பட இருவருக்கு அபராதம்!
Local
06 August 2026
சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!
Local
06 August 2026
‘TM App’ செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக அறிவிப்பு: பட்டியலை புதுப்பித்தது இலங்கை மத்திய வங்கி!
Local
06 August 2026
கோப் குழு கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் இருவர் மன்னிப்பு கோரினர்!
Local
06 August 2026
செங்கடல் கப்பல்கள் மீதான ஹூதி தாக்குதல்: ஏமன் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா தூதர் ஆலோசனை!
Local
06 August 2026