முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என பிரபல சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா பகிரங்க அறிக்கை ஒன்றினூடாக வலியுறுத்தியுள்ளார்.
குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் அவர் ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் அவர் ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
Latest News
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி!
Local
05 August 2026
நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா வானூர்தி : 300 அடிகள் கீழே சரிந்து பயணிகள் காயம்!
Local
05 August 2026
இத்தாலியில் தீவிரமடையும் கடும் வெப்ப அலை: 27 முக்கிய நகரங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!
Local
05 August 2026
திருமணமாகும் பெண்களுக்கு 1 பவுண் தங்கம், பட்டுப்புடவை – 'அண்ணன் சீர் திட்டம்' அறிவிப்பு
Local
05 August 2026
முதன்முறையாக அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி அதிவேக நெடுஞ்சாலை - 2030 வரை இலக்கு!
Local
05 August 2026
சீனாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளம் அறிமுகம்
Local
05 August 2026
ஈட்டி எறிதலில் வரலாற்றுச் சாதனை - சார்ஜன்ட் ஆகப் பதவி உயர்வு பெற்றார் ருமேஷ் தரங்க!
Local
05 August 2026
அகிலவிராஜ் காரியவசம் கைது
Local
05 August 2026
வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு
Local
05 August 2026
தமிழ்நாடு பாதீடு 2026-27 : 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு!
Local
05 August 2026