General04 August 2026

நீதிமன்ற வழக்குத் தேக்க நிலை மற்றும் சிறைச்சாலை நெரிசலைத் தீர்க்க விசேட நாடாளுமன்றக் குழு! –சஜித் பிரேமதாச யோசனை சமர்ப்பிப்பு

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடி நிலையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைகளில் ஏற்படும் அமைதியின்மையைத் தடுத்தல் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காகக் விசேட நாடாளுமன்றக் குழுவொன்றை நியமிக்கக் கோரும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்துள்ளார்.

நீதிமன்றச் செயற்பாடுகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும், சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவிலான கைதிகளின் நெரிசலைக் குறைத்து அங்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் அல்லது அமைதியின்மையைத் தடுப்பதற்கும் தேவையான உத்திகள் மற்றும் சட்டச் சீர்திருத்தங்களை இந்த விசேட குழுவின் ஊடாக ஆராய்ந்து பரிந்துரைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Related recommendation
Hiru TV News | Programmes