General04 August 2026

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் கங்க இஹள கோரளை, உடுதும்பர மற்றும் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, நுவரெலியா மாவட்டத்தின் ஹம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரை அமலில் இருக்கும்.

அதேபோல், கண்டி மாவட்டத்தின் பன்வில, மததும்பர, உடுபான்வில, தொலுவ மற்றும் தெல்தோட்டை, கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெரணியகல, தெஹியோவிட்டை மற்றும் புலத்கோஹுபிட்டிய, நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை கிழக்கு மற்றும் மேற்கு, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேசங்களுக்கான இரண்டாம் நிலை எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கேகாலை மாவட்டத்தின் கேகாலை, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல மற்றும் குருவிட்டை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes