மஹர சிறைச்சாலை சம்பவத்துக்கு வெளிப்புறத் தூண்டுதல் ஏதேனும் இருந்ததா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விரிவான விளக்கம் ஒன்றை முன்வைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கைதிகளுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் ஏனைய சிறைச்சாலைகளின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற நாளில் மஹர சிறைச்சாலையின் சமையலறை கட்டிடத்தின் கூரையில் முதலில் மூன்று கைதிகள் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறைச்சாலை அத்தியட்சகர் அவர்களுடன் சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அவர்கள் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை.
இதன்பின்னர், மற்ற சிறைக்கூடங்களில் இருந்த சுமார் 16 கைதிகள் அங்கு ஒன்று திரண்டதுடன், பெரும் சத்தமிட்டு பதற்றத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால், சிறைச்சாலை அதிகாரிகள் பின்வாங்கி பிரதான நுழைவாயிலை மூடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Latest News
பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார் : திரையுலகம் இரங்கல்!
Local
05 August 2026
அதிவேகப் பாதைகளில் பயணிப்போருக்கு ஆசனப்பட்டி கட்டாயம்: உற்பத்தியாளர்களுக்கான கால அவகாசம் நீடிப்பு
Local
05 August 2026
அதிரடியாக குறைந்த எண்ணெய் விலை : ட்ரம்பின் முக்கிய அறிவிப்பால் வந்த மாற்றம்!
Local
05 August 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மீண்டும் திறப்பு: மகாவலி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை!
Local
05 August 2026
இரத்மலானை வீடொன்றின் மீது அடுத்தடுத்து வீசப்பட்ட 2 கைக்குண்டுகள் : பதற்றத்தில் அப்பகுதி மக்கள்!
Local
05 August 2026
ரூ.1.10 கோடி மதிப்பிலான கஞ்சாவுடன் 31 வயது நபர் கைது : அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய பின்னணி!
Local
05 August 2026
சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களை முடக்க உத்தரவு: தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு TRCSL அறிவுறுத்தல்
Local
04 August 2026
செங்கடலில் தாக்குதலுக்கு இலக்கான இந்தியக் கப்பல் மூழ்கியது: 13 இந்தியர்கள் உட்பட 14 பணியாளர்கள் மீட்பு
Local
04 August 2026
காத்தான்குடி பள்ளிவாசல் பேரவலம்: மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
Local
04 August 2026
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு
Local
04 August 2026