மஹர சிறைச்சாலை சம்பவத்துக்கு வெளிப்புறத் தூண்டுதல் ஏதேனும் இருந்ததா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விரிவான விளக்கம் ஒன்றை முன்வைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கைதிகளுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் ஏனைய சிறைச்சாலைகளின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற நாளில் மஹர சிறைச்சாலையின் சமையலறை கட்டிடத்தின் கூரையில் முதலில் மூன்று கைதிகள் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறைச்சாலை அத்தியட்சகர் அவர்களுடன் சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அவர்கள் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை.
இதன்பின்னர், மற்ற சிறைக்கூடங்களில் இருந்த சுமார் 16 கைதிகள் அங்கு ஒன்று திரண்டதுடன், பெரும் சத்தமிட்டு பதற்றத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால், சிறைச்சாலை அதிகாரிகள் பின்வாங்கி பிரதான நுழைவாயிலை மூடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Latest News
கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்
Local
08 August 2026
எது நடந்தாலும் “இது நாமலின் வேலைதான்” என குற்றம்சாட்ட அரசாங்கம் முயல்கிறது!
Local
08 August 2026
இலங்கைத் தொடருக்காக சாய் சுதர்சனுக்குப் பதிலாக இருவர் பரிசீலனை!
Local
08 August 2026
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்!
Local
08 August 2026
மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!
Local
08 August 2026
கொண்டைக்கடலைக்கு தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி வாயுவை சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழப்பு
Local
08 August 2026
சக வீராங்கனையுடன் தொடர்பு: அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணைத் தலைவி மீது முன்னாள் மனைவி பகிரங்கக் குற்றச்சாட்டு!
Local
08 August 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Local
08 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!
Local
08 August 2026
பாகிஸ்தானில் கடுமையாக உயரும் பொருட்கள் விலை: அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்
Local
08 August 2026