International05 August 2026

போலி புகைப்படங்களால் கொதித்த மிருனாள் தாகூர்- இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை

நடிகை மிருனாள் தாகூர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது தோற்றத்தை தவறாகச் சித்தரிக்கும் போலி புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருவதாகக் கூறி, அவற்றுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது தோற்றத்தைப் பயன்படுத்தி போலியான புகைப்படங்களை உருவாக்குவதும், அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வதும் சட்டவிரோதமான செயல் எனவும், இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், "எனது தோற்றத்தை தவறாகப் பயன்படுத்தி போலி புகைப்படங்களை உருவாக்குவதையோ அல்லது பகிர்வதையோ உடனடியாக நிறுத்துங்கள். இதுவே எனது கடைசி எச்சரிக்கை. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சமூக ஊடகங்களில் இதுபோன்ற போலி புகைப்படங்களை வெளியிடும் கணக்குகளை தமக்கு அடையாளப்படுத்துமாறும் ரசிகர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தவறான உள்ளடக்கங்களைப் பரப்பும் கணக்குகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், மிருனாள் தாகூரின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes