நடிகை மிருனாள் தாகூர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது தோற்றத்தை தவறாகச் சித்தரிக்கும் போலி புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருவதாகக் கூறி, அவற்றுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது தோற்றத்தைப் பயன்படுத்தி போலியான புகைப்படங்களை உருவாக்குவதும், அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வதும் சட்டவிரோதமான செயல் எனவும், இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், "எனது தோற்றத்தை தவறாகப் பயன்படுத்தி போலி புகைப்படங்களை உருவாக்குவதையோ அல்லது பகிர்வதையோ உடனடியாக நிறுத்துங்கள். இதுவே எனது கடைசி எச்சரிக்கை. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சமூக ஊடகங்களில் இதுபோன்ற போலி புகைப்படங்களை வெளியிடும் கணக்குகளை தமக்கு அடையாளப்படுத்துமாறும் ரசிகர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தவறான உள்ளடக்கங்களைப் பரப்பும் கணக்குகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், மிருனாள் தாகூரின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
Latest News
மெக்சிகோவில் டிக்டொக் பிரபலம் நேரலையில் துப்பாக்கிச் சூட்டில் பலி!
Local
06 August 2026
அநுராதபுரத்தில் ஒரேயொரு தமிழ் பாடசாலையின் காணியை பாதுகாக்க பெரும் போராட்டம்!
Local
06 August 2026
புத்தாண்டு அழகி போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண் உட்பட இருவருக்கு அபராதம்!
Local
06 August 2026
சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!
Local
06 August 2026
‘TM App’ செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக அறிவிப்பு: பட்டியலை புதுப்பித்தது இலங்கை மத்திய வங்கி!
Local
06 August 2026
கோப் குழு கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் இருவர் மன்னிப்பு கோரினர்!
Local
06 August 2026
செங்கடல் கப்பல்கள் மீதான ஹூதி தாக்குதல்: ஏமன் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா தூதர் ஆலோசனை!
Local
06 August 2026
இங்கிலாந்து, அயர்லாந்து தொடர் தோல்விகள்: பிசிசிஐயின் ஆய்வுக் கூட்டம் தள்ளிப்போவது ஏன்?
Local
06 August 2026
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
Local
06 August 2026
இதுவரை 471 மருந்தகங்களில் விசேட சோதனைகள்: ரூ.22 லட்சத்துக்கும் அதிக அபராதம்!
Local
06 August 2026