நடிகை மிருனாள் தாகூர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது தோற்றத்தை தவறாகச் சித்தரிக்கும் போலி புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருவதாகக் கூறி, அவற்றுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது தோற்றத்தைப் பயன்படுத்தி போலியான புகைப்படங்களை உருவாக்குவதும், அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வதும் சட்டவிரோதமான செயல் எனவும், இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், "எனது தோற்றத்தை தவறாகப் பயன்படுத்தி போலி புகைப்படங்களை உருவாக்குவதையோ அல்லது பகிர்வதையோ உடனடியாக நிறுத்துங்கள். இதுவே எனது கடைசி எச்சரிக்கை. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சமூக ஊடகங்களில் இதுபோன்ற போலி புகைப்படங்களை வெளியிடும் கணக்குகளை தமக்கு அடையாளப்படுத்துமாறும் ரசிகர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தவறான உள்ளடக்கங்களைப் பரப்பும் கணக்குகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், மிருனாள் தாகூரின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
Latest News
கிரிக்கெட் வீரர்களின் வரி நெருக்கடி தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 31 இல்!
Local
06 August 2026
மலையகக் கட்சித் தலைவர்களுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு: காணி உரிமை, வீட்டுத்திட்டம் குறித்து பேச்சு!
Local
06 August 2026
வலுவான எல் நினோ தாக்கத்தால் உலகளவில் மேலும் 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை
Local
06 August 2026
அடுத்த இரண்டு வருடங்களில் டெங்குவை முற்றாக ஒழிக்க திட்டமிட்ட தேசிய திட்டம் அவசியம்: அமைச்சர் வலியுறுத்தல்
Local
06 August 2026
ஃப்ளை பாக்தாத் வானூர்தி நிறுவனம் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா!
Local
05 August 2026
செம்மணியில் திறந்த நீதிமன்ற அமர்வு: புதிதாக மேலும் 8 என்புக்கூடுகள்; இதுவரை 489 என்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
Local
05 August 2026
ஹோர்முஸ் நீரிணை கப்பல் பாதை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உடன்பாடு!
Local
05 August 2026
சுரேஷ் சலே வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு - விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை!
Local
05 August 2026
ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு
Local
05 August 2026
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்
Local
05 August 2026