International06 August 2026

ஜெர்மன் வானூர்தி நிலையத்தில் வெடிபொருளுடன் ஆளில்லா வானூர்தி கண்டுபிடிப்பு: காவல்துறை தீவிர விசாரணை!

ஜெர்மனியில் உள்ள லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) வானூர்தி நிலையத்தில் யுக்ரைனிய சரக்கு வானூர்திகளுக்கு அருகில் வெடிபொருளுடன் கூடிய ஆளில்லா வானூர்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் வானூர்தி நிலைய ஊழியர் ஒருவர் இந்தச் சாதனத்தைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் ரோபோ அங்கு அனுப்பப்பட்டதையடுத்து அதில் இருந்த வெடிபொருள் (detonator) அகற்றப்பட்டு, பின்னர் காவல்துறை மூலம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடித்துச் செயலிழக்கச் செய்யப்பட்டது.

இதேவேளை இந்த வானூர்தி நிலையத்திற்கு அருகே அடையாளம் தெரியாத மற்றொரு பொருள் மோதியதில், ஹனோவரில் (Hanover) தரையிறங்கிய சரக்கு வானூர்தி ஒன்றில் சிறிய அளவிலான சேதம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ரஷ்ய உளவு அமைப்புகள் இருக்கலாம் என காவல்துறை எச்சரித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை அந்த நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes