காவல்துறை மாஅதிபரை பொது வீதியில் வைத்து உயிர் அச்சுறுத்தல் செய்ய முயற்சி நடப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பாக, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
புலனாய்வு அதிகாரிகளின் சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த நீதவான், இந்த விடயம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடர்வதற்கு அனுமதி வழங்கினார்.
ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துக்களையடுத்தே இந்த சர்ச்சை உருவானது.
முன்னாள் காவல்துறை மாஅதிபர்களின் நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய காவல்துறைத் தலைவர் அரசாங்கத்திற்குச் சேவையாற்றுவதை விட அரசிற்கும் பொதுமக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
காவல்துறை மாஅதிபர் பரிதாபகரமான முடிவைச் சந்தித்த மற்றொரு காவல்துறைத் தலைவராக மாறக்கூடும் என்பதைக் குறிப்பிடும் வகையில் அமைந்த அவரது கருத்துக்கள், அரசாங்கத் தரப்பினரிடையே கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
"பொதுமக்களால் வீதியில் வைத்து பலியான 37 ஆவது காவல்துறை மாஅதிபராக அவர் வரலாற்றில் இடம்பெறுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று காரியவசம் கூறியிருந்தார்.
காவல்துறை மாஅதிபரைப் பொதுவெளியில் உயிர் அச்சுறுத்தல் செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கூற்று மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் குற்றங்களை அடக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கும் காவல்துறை மாஅதிபருக்கும், அவரது கட்டளையின் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் அரசாங்கம் முழுமையான பாதுகாப்பு வழங்கும் என்றும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.
Latest News
லலித் – குகன் காணாமற்போன வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி ஊடாக சாட்சியமளிக்க உத்தரவு
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகளின் போராட்டம் தீவிரம்
Local
07 August 2026
பிரதம நீதியரசர் மற்றும் காவல்துறை மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அருகே காணொளி பதிவு செய்த சந்தேகநபர் கைது
Local
07 August 2026
விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Local
07 August 2026
ரவி செனவிரத்னவிற்கு எதிரான வழக்குக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது மேல் நீதிமன்றம்!
Local
07 August 2026
தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றம்: கூரை மீதேறி கைதிகள் போராட்டம்!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: ஒரு கைதி உயிரிழப்பு
Local
07 August 2026
'ஜனநாயகன்' தந்த விழிப்புணர்வு: 'குட் டச், பேட் டச்' காட்சியால் தைரியம் பெற்ற 8 வயது சிறுமி
Local
07 August 2026
புளத்சிங்களவில் சிற்றூந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
07 August 2026