International07 August 2026

நடிகர் சங்கக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்: நடிகர் விஷால் தகவல்!

சென்னையில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய நடிகர் விஷால், நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை யாரோ திறந்து வைக்கப்போகிறார்கள் என்று நினைத்ததாகவும், ஆனால் தற்போதைய முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினருமான விஜய்யே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இந்தக் கட்டிடப் பணிகளுக்காகத் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தார்.

நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்குப் பிறகு, தற்போது இந்தக் கட்டிடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் கட்டிடம் திறக்கப்பட்ட பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்பதில் நடிகர் விஷால் உறுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes