General07 August 2026

குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: 4 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையின் போது காயமடைந்த 4 கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த காவல்துறையினரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யூ.வூட்லர் குறிப்பிட்டுள்ளார்.

குருவிட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட காவல்துறை அதிரடிப்படையினரும், கலகத்தடுப்பு பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related recommendation
Hiru TV News | Programmes