International09 August 2026

ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.

ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புப் பேரவையின் செயலாளர் மொஹம்மது பாகர் ஸோல்கத்ர் இந்த நிபந்தனைகளை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியைத் திறப்பது ஓமான் நாட்டுடன் செய்யப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லாமல், தெஹ்ரானின் நிபந்தனைகளை அமெரிக்கா "முழுமையாக ஏற்றுக்கொள்வதைப்" பொறுத்தது என்று ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் பேச்சாளர் சர்தார் மொஹேபி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா போதிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன், நீரிணைப் பகுதியில் மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகையையும் முழுமையாக விலக்கிக் கொண்டால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes