International10 August 2026

சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு

சவூதி அரேபியாவின் ஜாஸானில் அமைந்துள்ள 'சவூதி அராம்கோ' (Saudi Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஈரானிய ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அந்தச் சுத்திகரிப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சவூதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த விதக் காயங்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes