General10 August 2026

சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!

மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் இன்று (10) காலை கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறைமா அதிபர் தொடர்பில் பொது வெளியில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்துக்கு சாகர காரியவசம் இன்று முற்பகல் அழைக்கப்பட்டார்.

அதன்போது, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes