தற்போதைய பிரதம நீதியரசரை இலக்கு வைத்து வெளியிடப்படும் கருத்துகள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் எனக் கூறி, அவற்றுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி ஜகத் அபேநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றச் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி தற்போதைய பிரதம நீதியரசரை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து அண்மையில் வெளியிடப்பட்டக் கூற்றுகள் தீவிர கவனத்திற்குரிய விவகாரமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் கூட்டுவதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் நீதித்துறைச் சட்டத் திருத்த யோசனைகள் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியிலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அவை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து 14 நாட்களுக்குள் அவற்றின் அரசியலமைப்புத் தன்மையை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த எந்தவொரு தரப்பிற்கும் சந்தர்ப்பம் உள்ளது.
இந்தநிலையில்,சட்டத்தரணிகள் சங்கத்தின் சில உறுப்பினர்கள், முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீடிக்கும் நோக்கிலான நடவடிக்கை என சித்தரிக்கும் வகையில் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாகவும், இந்தக் கூற்றுகள் பொதுமக்களையும் மகா சங்கத்தினரையும் தவறாக வழிநடத்துவதாகவும் அபேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கு சட்டத்தரணிகள் சங்க தலைமைத்துவம் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளபோதிலும், பிரதம நீதியரசரை இலக்கு வைத்துத் தனிப்பட்ட ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்களுக்குச் சங்கம் பதிலளிக்கத் தவறியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
இந்த விடயத்தில் சங்கத்தின் தற்போதைய மௌனமானது, குறித்த கருத்துகளைச் சங்கம் அங்கீகரிப்பதாகவே பொதுமக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்தும் எனக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டத்தரணிகள் சங்கம் தனது தொழில்முறைத் தன்மையைப் பேணித் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவுடன் இது குறித்துக் கலந்துரையாட வாய்ப்பளிக்குமாறும் ஜகத் அபேநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
விக்ரம் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு – அரிய குரங்கு தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள்!
Local
11 August 2026
அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு அரசாங்கம் சட்டவாட்சியைத் தவறாகப் பயன்படுத்துகிறது - தினன தகுண கண்டனம்!
Local
11 August 2026
நாட்டின் 4 மாவட்டங்களிலுள்ள தாய்மார்கள், சிறுவர்களுக்கான விசேட ஊட்டச்சத்து வேலைத்திட்டம்: அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026
ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் புதிய இணையவழி தாக்குதல்!
Local
11 August 2026
நாளை ஆடி அமாவாசை : இந்துக் குருமார் அமைப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
11 August 2026
போர் குற்றம் புரிந்தமைக்காக சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு மரண தண்டனை!
Local
11 August 2026
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டத்துக்கு நிதியை பெற அமைச்சரவை அனுமதி!
Local
11 August 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் அரசாங்கம் ஆலோசனை
Local
11 August 2026
ரத்மலான சைமாவை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி
Local
11 August 2026
முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் அரச காணிகள் குத்தகைக்கு - அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026