General12 August 2026

தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு - எவருக்கும் காயமில்லை

தங்காலை, குடாவெல்ல பகுதிக்குட்பட்ட நகுலுகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes