கற்பிட்டி, குரக்கன் ஹேன பகுதியில் உள்ள ஏரியில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில், அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 7 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பத்தினர் நேற்று (11) பிற்பகல் கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக வள்ளத்தில் பயணித்துள்ளனர்.
இதன்போது வள்ளம் கவிழ்ந்ததில், தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர்கள் கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிள்ளைகள் இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தந்தை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
துரந்தர் திரைப்படத்தின் வெற்றி: நடிகை சாரா அர்ஜுனுக்கு அதிகரிக்கும் பட வாய்ப்புகள்!
Local
12 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் - ஜனாதிபதி
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாய் உயிரிழப்பு
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு - பெக்கோ சமனின் தாய்க்கு காயம்
Local
12 August 2026
குஜராத் அணிக்குத் திரும்ப ஹர்திக் பாண்டியா விதித்த நிபந்தனை – சுப்மன் கில்லிடம் ஆலோசனை கேட்ட நிர்வாகம்
Local
12 August 2026
7 மாவட்டங்களுக்கு வெப்பச் சுட்டெண் அதிகரிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
12 August 2026
யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவருக்கு காயம்
Local
12 August 2026
கிரிக்கெட்டில் புதிய பயணத்தைத் தொடங்கும் ரஹானே!
Local
12 August 2026
‘தர்மன்’ திரைப்படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தீவிரம்
Local
12 August 2026
அருண்ராஜா காமராஜ் படத்தைக் கைவிட்ட விஷ்ணு விஷால் – கருத்து வேறுபாட்டால் முறிந்த கூட்டணி
Local
12 August 2026