கற்பிட்டி, குரக்கன் ஹேன பகுதியில் உள்ள ஏரியில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில், அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 7 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பத்தினர் நேற்று (11) பிற்பகல் கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக வள்ளத்தில் பயணித்துள்ளனர்.
இதன்போது வள்ளம் கவிழ்ந்ததில், தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர்கள் கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிள்ளைகள் இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தந்தை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
மலையகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க ஆன்மீக விழிப்புணர்வு!" – சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடித் திட்டம்.
Local
15 August 2026
இந்துக்களிடையே பிளவுகளைக் கடந்து வலுவான தலைமைத்துவம் தேவை – சுந்தரலிங்கம் பிரதீப்
Local
15 August 2026
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவு!
Local
15 August 2026
வத்தளை மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் : உயிர்சேதங்கள் பதிவாகவில்லை !
Local
15 August 2026
"பெரிய திமிங்கலங்கள் விரைவில் அகப்படுவார்கள்!" – பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி!
Local
15 August 2026
வீட்டுக் காவல் திட்டம் இலங்கையில் சாத்தியமா? சுந்தரலிங்கம் பிரதீப் சொன்ன முக்கிய தகவல்!
Local
15 August 2026
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!
Local
15 August 2026
“அரசியல்வாதிகளுக்கு பயம்!” – சிறைச்சாலை மோதல்கள் குறித்து பிரதீப் அதிரடி தகவல்
Local
15 August 2026
அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது - எதிர்க்கட்சியினர் விரைவில் சிறை செல்வர்
Local
15 August 2026
அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது
Local
15 August 2026