கொஹுவலை பாலத்துக்கு அடியில் உந்துருளியில் நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் படம் தொடர்பாகப் போலிச் செய்திகளையும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் பரப்ப வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பரப்புவது சமூகத்துக்குப் பாரிய தீங்கை விளைவிப்பதுடன், இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக ஊடகப் பயனர்கள் எந்தவொரு பதிவையும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், 'பரிசோதியுங்கள், உறுதிப்படுத்துங்கள், பொறுப்புடன் பகிருங்கள்' (Check, Verify and Share Responsibly) என்ற மூன்று அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு செய்தியை மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன், அதன் மூல ஆதாரம் உண்மையானதா எனப் பரிசோதிக்க வேண்டும் என்றும், நம்பகமான மற்றும் உத்தியோகபூர்வ செய்தி ஆதாரங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே பொய் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, பயம் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பரப்புவது சமூகத்துக்குப் பாரிய தீங்கை விளைவிப்பதுடன், இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக ஊடகப் பயனர்கள் எந்தவொரு பதிவையும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், 'பரிசோதியுங்கள், உறுதிப்படுத்துங்கள், பொறுப்புடன் பகிருங்கள்' (Check, Verify and Share Responsibly) என்ற மூன்று அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு செய்தியை மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன், அதன் மூல ஆதாரம் உண்மையானதா எனப் பரிசோதிக்க வேண்டும் என்றும், நம்பகமான மற்றும் உத்தியோகபூர்வ செய்தி ஆதாரங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே பொய் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, பயம் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Latest News
இந்திய அணியை வழிநடத்துவது பெரும் கௌரவம் – 600ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பான தருணம் என சுப்மன் கில் தெரிவிப்பு
Local
15 August 2026
போட்டி நடுவே தோழிக்கு குறுஞ்செய்தி - தமிழ்நாடு வீரருக்கு நேர்ந்த கதி
Local
15 August 2026
திருமண நிதி உதவி இரண்டு மடங்காக அதிகரிப்பு: சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு
Local
15 August 2026
எல் நினோ வெப்ப அலையால் மனநலப் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம்: மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை!
Local
15 August 2026
கடவுளுக்கு நன்றி!” – சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சரின் தாய் உருக்கம்
Local
15 August 2026
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் : செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!
Local
15 August 2026
கைது செய்யப்பட்ட"ஷிரான் பாசிக்" என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு
Local
15 August 2026
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: நாணயசுழற்சியில் இந்திய அணி வெற்றி
Local
15 August 2026
காலி மைதானத்தில் தேசியக் கொடியேற்றிய இந்திய கிரிக்கெட் அணி
Local
15 August 2026
சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!
Local
15 August 2026