இலங்கையில் யானைகளின் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைப் பாதுகாப்பதற்கான உரிய வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளரும் சூழலியலாளருமான நயனக ரன்வெல்ல கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய தந்தத்தைக் கொண்ட ‘மஹசென்’ மற்றும் மிகப்பெரிய நெற்றிப் பகுதியை கொண்ட ‘செண்டோ’ உள்ளிட்ட பல முக்கிய யானைகள் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தரவுகளின்படி, நாட்டில் ஆண்டுக்கு சுமார் 450 யானைகள் உயிரிழப்பதாகப் பதிவாகியுள்ளதுடன், பதிவாகாமல் காடுகளுக்குள் மேலும் 150க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1990ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, ஒரு வருடத்துக்கு மொத்தம் 22 யானைகள் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், தற்போதைய இறப்பு வீதம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
யானைகள் என்பது காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணும் பிரதான உயிரினமாகும். எனவே யானைகள் அழியும் பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சுற்றாடல் சமநிலையும் முற்றாகச் சீர்குலையும் என்றும் எச்சரித்துள்ளார்.
அத்துடன், ஒரு யானை தனது வாழ்நாளில் இலங்கைக்குக் குறைந்தபட்சம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித் தருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யானைகள் தொடர்ந்து இதே வேகத்தில் உயிரிழந்து வந்தால், எதிர்காலத்தில் அருங்காட்சியகங்களில் பதப்படுத்தப்பட்ட மாதிரிகளாக மட்டுமே யானைகளைப் பார்க்க நேரிடும் என்றும் சூழலியலாளர் நயனக ரன்வெல்ல மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய தந்தத்தைக் கொண்ட ‘மஹசென்’ மற்றும் மிகப்பெரிய நெற்றிப் பகுதியை கொண்ட ‘செண்டோ’ உள்ளிட்ட பல முக்கிய யானைகள் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தரவுகளின்படி, நாட்டில் ஆண்டுக்கு சுமார் 450 யானைகள் உயிரிழப்பதாகப் பதிவாகியுள்ளதுடன், பதிவாகாமல் காடுகளுக்குள் மேலும் 150க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1990ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, ஒரு வருடத்துக்கு மொத்தம் 22 யானைகள் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், தற்போதைய இறப்பு வீதம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
யானைகள் என்பது காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணும் பிரதான உயிரினமாகும். எனவே யானைகள் அழியும் பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சுற்றாடல் சமநிலையும் முற்றாகச் சீர்குலையும் என்றும் எச்சரித்துள்ளார்.
அத்துடன், ஒரு யானை தனது வாழ்நாளில் இலங்கைக்குக் குறைந்தபட்சம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித் தருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யானைகள் தொடர்ந்து இதே வேகத்தில் உயிரிழந்து வந்தால், எதிர்காலத்தில் அருங்காட்சியகங்களில் பதப்படுத்தப்பட்ட மாதிரிகளாக மட்டுமே யானைகளைப் பார்க்க நேரிடும் என்றும் சூழலியலாளர் நயனக ரன்வெல்ல மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
வத்தளை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் - இந்தியாவில் கைதான இரு சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
13 August 2026
பெறுமதி சேர் வரியை செலுத்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் - தவறும் பட்சத்தில் அபராதம்!
Local
13 August 2026
அவுஸ்திரேலியாவில் 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
Local
13 August 2026
எல் நினோ தாக்கம் - 2027 ஆம் ஆண்டு வரை வறட்சி தீவிரமடையும் அபாயம்!
Local
13 August 2026
இரண்டாவது மகனின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவு வெளியிட்ட ஆர்த்தி ரவி!
Local
13 August 2026
மின்தூக்கியில் ஏன் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
Local
13 August 2026
ஒரே நாளில் 1.06 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: கைச்சாத்தான ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அசத்தல்!
Local
13 August 2026
"ஒருநாள் ரெமோ.. மறுநாள் அந்நியன்" - காதல் வலியை வெளிப்படையாக உடைத்த அனுபமா!
Local
13 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் - சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறியது எண்ணை விலை
Local
13 August 2026
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் - சமரி அத்தபத்து தலைமையில் இலங்கை குழாம் அறிவிப்பு!
Local
13 August 2026