நீதித்துறையின் சுதந்திரம் போன்ற உணர்வுபூர்வமான மற்றும் உயர்ந்த விடயங்களில் அரசாங்கம் எவ்வித ஆபத்தினையும் எடுக்கக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்டத்துறையின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டது.
அத்துடன், உத்தேசிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டத்தரணிகள் சமூகம் முழுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், "நீதித்துறையின் சுதந்திரம் என்பது ஒரு உன்னதமான கருத்தாக்கமாகும். இதில் ஏதேனும் ஆபத்து இருப்பதாக ஜனாதிபதி கருதினால், அதற்கான ஒரே தீர்வு இதனைச் செய்யாமல் இருப்பதே ஆகும்.
நாட்டின் அபிவிருத்தி, அமைச்சுப் பதவிகளை வழங்குவது போன்ற விடயங்களில் அரசாங்கம் ஆபத்துக்களை எடுக்க முடிந்தாலும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அடிபணியச் செய்யும் அல்லது ஆபத்தை விளைவிக்கும் எதனையும் ஒருபோதும் செய்யக்கூடாது. ஏனெனில் இது ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கும் தேசியப் பிரச்சினை என அவர் வலியுறுத்தினார்.
உத்தேசிக்கப்பட்ட திருத்தம் தொடர்பில் சட்டத்தரணி சங்கம், நீதிபதிகள் சங்கங்கள், மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அவதானிகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் கூட எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
இதன்படி, தற்போது இதற்கு ஆதரவளிப்பது அரசாங்கம் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, அவசரப்படாமல் பரந்து பட்ட அறிஞர்களின் கலந்துரையாடலுக்குப் பின்னர் நாட்டிற்கும் மக்களுக்கும் நலன் பயக்கும் நியாயமானதொரு முடிவுக்கு வருமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார்.
Latest News
மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய புத்தகங்கள் காகிதக் கூழாக இந்தியாவிற்கு ஏற்றுமதி: காவல்துறையின் அதிரடி விசாரணை!
Local
14 August 2026
பால்வெளிக்கு அப்பால் அரிய நட்சத்திரம்: விண்வெளி ஆய்வில் வெளியான பிரபஞ்ச விசித்திரம்!
Local
14 August 2026
சூரிய கிரகணத்தின்போது திருமணத்துக்கு சம்மதம் கோரிய காதலன்
Local
14 August 2026
வாகன இறக்குமதி வரி: 50% மேலதிகக் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!
Local
14 August 2026
துபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பசிக் இன்று நாட்டுக்கு
Local
14 August 2026
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர் - அட்டவணை மாற்றம் குறித்து பரிசீலனை!
Local
14 August 2026
அமெரிக்காவின் சந்திர தள திட்டத்தில் இணைய இந்தியாவிற்கு அழைப்பு!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Local
14 August 2026
தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்
Local
14 August 2026
"மண்டபத்திற்குள் விருந்தாளியாக நுழைந்த முதலை!" - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!
Local
14 August 2026