நீதித்துறையின் சுதந்திரம் போன்ற உணர்வுபூர்வமான மற்றும் உயர்ந்த விடயங்களில் அரசாங்கம் எவ்வித ஆபத்தினையும் எடுக்கக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்டத்துறையின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டது.
அத்துடன், உத்தேசிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டத்தரணிகள் சமூகம் முழுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், "நீதித்துறையின் சுதந்திரம் என்பது ஒரு உன்னதமான கருத்தாக்கமாகும். இதில் ஏதேனும் ஆபத்து இருப்பதாக ஜனாதிபதி கருதினால், அதற்கான ஒரே தீர்வு இதனைச் செய்யாமல் இருப்பதே ஆகும்.
நாட்டின் அபிவிருத்தி, அமைச்சுப் பதவிகளை வழங்குவது போன்ற விடயங்களில் அரசாங்கம் ஆபத்துக்களை எடுக்க முடிந்தாலும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அடிபணியச் செய்யும் அல்லது ஆபத்தை விளைவிக்கும் எதனையும் ஒருபோதும் செய்யக்கூடாது. ஏனெனில் இது ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கும் தேசியப் பிரச்சினை என அவர் வலியுறுத்தினார்.
உத்தேசிக்கப்பட்ட திருத்தம் தொடர்பில் சட்டத்தரணி சங்கம், நீதிபதிகள் சங்கங்கள், மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அவதானிகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் கூட எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
இதன்படி, தற்போது இதற்கு ஆதரவளிப்பது அரசாங்கம் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, அவசரப்படாமல் பரந்து பட்ட அறிஞர்களின் கலந்துரையாடலுக்குப் பின்னர் நாட்டிற்கும் மக்களுக்கும் நலன் பயக்கும் நியாயமானதொரு முடிவுக்கு வருமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார்.
Latest News
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026
கொரியப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
Local
16 August 2026
தாய் மற்றும் தம்பியின் உயிரை பறித்த 17 வயதுச் சிறுவன்: 'ChatGPT' செயலியைக் கொண்டு திட்டம் தீட்டியமை அம்பலம்!
Local
16 August 2026
80ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தடுமாற்றம் - அயர்லாந்து கொடியை அணிந்தார் எனவும் விமர்சனம்!
Local
16 August 2026
சிவப்பு அறிவித்தல் குற்றவாளிகள் 73 பேர் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்: காவல்துறை மாஅதிபர்
Local
16 August 2026
"பாலம் கட்டும்போது படகோட்டிக்கு சிக்கல் ஏற்படுவது இயல்பே" – விமர்சனங்களுக்கு உவமையில் நளிந்த பதில்!
Local
16 August 2026
பொலித்தீன் பயன்பாட்டை 10 மில்லியன் அலகுகளால் குறைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை கூறுகிறது!
Local
16 August 2026
சர்வதேச ரீதியில் இந்தியா குறித்த நேர்மறையான பார்வையில் இலங்கை முதலிடம் !
Local
16 August 2026