சர்வதேச ரீதியில் இந்தியா பற்றிய நேர்மறையான கருத்துக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக "பியூ ஆராய்ச்சி மையம்" (Pew Research Centre) நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் 36 நாடுகளில் 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டின் பெப்ரவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலகளவில் சராசரியாக 45 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து நேர்மறையான எண்ணத்தையும், 41 சதவீதமான மக்கள் எதிர்மறையான எண்ணத்தையும் கொண்டுள்ளனர்.
இலங்கையின் சாதகமான பதில் ஆய்வில் பங்கேற்ற இலங்கையர்களில் 79 சதவீதமானோர் இந்தியா குறித்து மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவைத் தங்களின் முக்கியமான நட்பு நாடாகவும் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 65 சதவீதமாக இருந்த இந்த சாதகமான பார்வை, தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய 7.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடன் உதவிகள் மற்றும் நிதியுதவிகளே இந்த இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய மற்றும் அண்டை நாடுகளின் நிலைஇந்தியாவின் அண்டை நாடுகளில் கலவையான கருத்துக்கள் பதிவாகியுள்ளன. பங்களாதேஷில் 42 சதவீதமானோர் சாதகமாகவும், 51 சதவீதமானோர் பாதகமாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பாகிஸ்தானில் 91 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து கடும் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியமை போன்ற தீவிரமடைந்த அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் 58 சதவீதமானோர் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டுள்ள போதிலும், ஜப்பான் (55%), தாய்லாந்து (55%), சிங்கப்பூர் (51%), இந்தோனேசியா (50%) மற்றும் பிலிப்பைன்ஸ் (49%) ஆகிய ஆசிய நாடுகளில் இந்தியா குறித்து சாதகமான நிலையே நீடிக்கிறது.
அமெரிக்காவில் 45 சதவீதமானோர் இந்தியா குறித்து சாதகமான கருத்துக்களையும், 50 சதவீதமானோர் எதிர்மறையான கருத்துக்களையும் கொண்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த சாதகமான நிலை 2026 ஆம் ஆண்டு 45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அங்குள்ள அரசியல் கட்சிகளில், ஜனநாயகக் கட்சியினரில் 50 சதவீதமானோரும், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரில் 42 சதவீதமானோரும் இந்தியாவுக்கு சாதகமாக வாக்களித்துள்ளனர்.
துருக்கி, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளில் இந்தியாவுக்கான ஆதரவு முறையே 15% மற்றும் 18% ஆகக் குறைந்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் 55 சதவீதமானோர் எதிர்மறையான பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல பகுதிகளில் இந்தியா தொடர்ந்தும் பலமான ஆதரவைப் பெற்று வருவதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் 36 நாடுகளில் 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டின் பெப்ரவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலகளவில் சராசரியாக 45 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து நேர்மறையான எண்ணத்தையும், 41 சதவீதமான மக்கள் எதிர்மறையான எண்ணத்தையும் கொண்டுள்ளனர்.
இலங்கையின் சாதகமான பதில் ஆய்வில் பங்கேற்ற இலங்கையர்களில் 79 சதவீதமானோர் இந்தியா குறித்து மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவைத் தங்களின் முக்கியமான நட்பு நாடாகவும் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 65 சதவீதமாக இருந்த இந்த சாதகமான பார்வை, தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய 7.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடன் உதவிகள் மற்றும் நிதியுதவிகளே இந்த இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய மற்றும் அண்டை நாடுகளின் நிலைஇந்தியாவின் அண்டை நாடுகளில் கலவையான கருத்துக்கள் பதிவாகியுள்ளன. பங்களாதேஷில் 42 சதவீதமானோர் சாதகமாகவும், 51 சதவீதமானோர் பாதகமாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பாகிஸ்தானில் 91 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து கடும் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியமை போன்ற தீவிரமடைந்த அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் 58 சதவீதமானோர் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டுள்ள போதிலும், ஜப்பான் (55%), தாய்லாந்து (55%), சிங்கப்பூர் (51%), இந்தோனேசியா (50%) மற்றும் பிலிப்பைன்ஸ் (49%) ஆகிய ஆசிய நாடுகளில் இந்தியா குறித்து சாதகமான நிலையே நீடிக்கிறது.
அமெரிக்காவில் 45 சதவீதமானோர் இந்தியா குறித்து சாதகமான கருத்துக்களையும், 50 சதவீதமானோர் எதிர்மறையான கருத்துக்களையும் கொண்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த சாதகமான நிலை 2026 ஆம் ஆண்டு 45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அங்குள்ள அரசியல் கட்சிகளில், ஜனநாயகக் கட்சியினரில் 50 சதவீதமானோரும், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரில் 42 சதவீதமானோரும் இந்தியாவுக்கு சாதகமாக வாக்களித்துள்ளனர்.
துருக்கி, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளில் இந்தியாவுக்கான ஆதரவு முறையே 15% மற்றும் 18% ஆகக் குறைந்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் 55 சதவீதமானோர் எதிர்மறையான பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல பகுதிகளில் இந்தியா தொடர்ந்தும் பலமான ஆதரவைப் பெற்று வருவதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Latest News
2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 460/9
Local
16 August 2026
நுவரெலியா உந்துருளி பந்தயத்தில் விபத்து: காயமடைந்த இரு போட்டியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Local
16 August 2026
‘கருப்பு’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்தது ‘விஸ்வநாத் & சன்ஸ்’: இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை!
Local
16 August 2026
நுவரெலியா மாவட்ட நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க கணக்காய்வு குழு: ஜனாதிபதி நடவடிக்கை!
Local
16 August 2026
அதிக வெப்பத்தால் அசம்பாவிதங்கள் நேரலாம்: பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!
Local
16 August 2026
த்ரிஷா வீட்டில் உள்ள பொருள் விஜய்யினுடையதா? வைரலாகும் நிழற்படம்!
Local
16 August 2026
டெங்கு பாதிப்பு: இலங்கையில் 92,000 ஐ கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை!
Local
16 August 2026
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது பங்களாதேஷ் அணி!
Local
16 August 2026
கொத்துக்கொத்தாக இறந்து மிதக்கும் மீன்கள் : வாழ்வாதாரம் இழந்து கடற்றொழிலாளர்கள் சோகம் - பின்னணியில் நடப்பது என்ன?
Local
16 August 2026
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!
Local
16 August 2026