சர்வதேச ரீதியில் இந்தியா பற்றிய நேர்மறையான கருத்துக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக "பியூ ஆராய்ச்சி மையம்" (Pew Research Centre) நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் 36 நாடுகளில் 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டின் பெப்ரவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலகளவில் சராசரியாக 45 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து நேர்மறையான எண்ணத்தையும், 41 சதவீதமான மக்கள் எதிர்மறையான எண்ணத்தையும் கொண்டுள்ளனர்.
இலங்கையின் சாதகமான பதில் ஆய்வில் பங்கேற்ற இலங்கையர்களில் 79 சதவீதமானோர் இந்தியா குறித்து மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவைத் தங்களின் முக்கியமான நட்பு நாடாகவும் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 65 சதவீதமாக இருந்த இந்த சாதகமான பார்வை, தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய 7.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடன் உதவிகள் மற்றும் நிதியுதவிகளே இந்த இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய மற்றும் அண்டை நாடுகளின் நிலைஇந்தியாவின் அண்டை நாடுகளில் கலவையான கருத்துக்கள் பதிவாகியுள்ளன. பங்களாதேஷில் 42 சதவீதமானோர் சாதகமாகவும், 51 சதவீதமானோர் பாதகமாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பாகிஸ்தானில் 91 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து கடும் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியமை போன்ற தீவிரமடைந்த அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் 58 சதவீதமானோர் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டுள்ள போதிலும், ஜப்பான் (55%), தாய்லாந்து (55%), சிங்கப்பூர் (51%), இந்தோனேசியா (50%) மற்றும் பிலிப்பைன்ஸ் (49%) ஆகிய ஆசிய நாடுகளில் இந்தியா குறித்து சாதகமான நிலையே நீடிக்கிறது.
அமெரிக்காவில் 45 சதவீதமானோர் இந்தியா குறித்து சாதகமான கருத்துக்களையும், 50 சதவீதமானோர் எதிர்மறையான கருத்துக்களையும் கொண்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த சாதகமான நிலை 2026 ஆம் ஆண்டு 45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அங்குள்ள அரசியல் கட்சிகளில், ஜனநாயகக் கட்சியினரில் 50 சதவீதமானோரும், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரில் 42 சதவீதமானோரும் இந்தியாவுக்கு சாதகமாக வாக்களித்துள்ளனர்.
துருக்கி, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளில் இந்தியாவுக்கான ஆதரவு முறையே 15% மற்றும் 18% ஆகக் குறைந்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் 55 சதவீதமானோர் எதிர்மறையான பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல பகுதிகளில் இந்தியா தொடர்ந்தும் பலமான ஆதரவைப் பெற்று வருவதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் 36 நாடுகளில் 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டின் பெப்ரவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலகளவில் சராசரியாக 45 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து நேர்மறையான எண்ணத்தையும், 41 சதவீதமான மக்கள் எதிர்மறையான எண்ணத்தையும் கொண்டுள்ளனர்.
இலங்கையின் சாதகமான பதில் ஆய்வில் பங்கேற்ற இலங்கையர்களில் 79 சதவீதமானோர் இந்தியா குறித்து மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவைத் தங்களின் முக்கியமான நட்பு நாடாகவும் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 65 சதவீதமாக இருந்த இந்த சாதகமான பார்வை, தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய 7.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடன் உதவிகள் மற்றும் நிதியுதவிகளே இந்த இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய மற்றும் அண்டை நாடுகளின் நிலைஇந்தியாவின் அண்டை நாடுகளில் கலவையான கருத்துக்கள் பதிவாகியுள்ளன. பங்களாதேஷில் 42 சதவீதமானோர் சாதகமாகவும், 51 சதவீதமானோர் பாதகமாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பாகிஸ்தானில் 91 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து கடும் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியமை போன்ற தீவிரமடைந்த அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் 58 சதவீதமானோர் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டுள்ள போதிலும், ஜப்பான் (55%), தாய்லாந்து (55%), சிங்கப்பூர் (51%), இந்தோனேசியா (50%) மற்றும் பிலிப்பைன்ஸ் (49%) ஆகிய ஆசிய நாடுகளில் இந்தியா குறித்து சாதகமான நிலையே நீடிக்கிறது.
அமெரிக்காவில் 45 சதவீதமானோர் இந்தியா குறித்து சாதகமான கருத்துக்களையும், 50 சதவீதமானோர் எதிர்மறையான கருத்துக்களையும் கொண்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த சாதகமான நிலை 2026 ஆம் ஆண்டு 45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அங்குள்ள அரசியல் கட்சிகளில், ஜனநாயகக் கட்சியினரில் 50 சதவீதமானோரும், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரில் 42 சதவீதமானோரும் இந்தியாவுக்கு சாதகமாக வாக்களித்துள்ளனர்.
துருக்கி, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளில் இந்தியாவுக்கான ஆதரவு முறையே 15% மற்றும் 18% ஆகக் குறைந்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் 55 சதவீதமானோர் எதிர்மறையான பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல பகுதிகளில் இந்தியா தொடர்ந்தும் பலமான ஆதரவைப் பெற்று வருவதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Latest News
இணையவழி கட்டடப் பொருள் மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை!
Local
17 August 2026
ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா செல்லமாட்டார்: பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!
Local
17 August 2026
எரிபொருள் மானியம் வழங்கப்படாவிடின் விலை அதிகரிக்கப்படும்: வலுசக்தி அமைச்சு எச்சரிக்கை!
Local
17 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை இன்று முதல் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!
Local
17 August 2026
22 ஆவது திருத்தத்தின் பின்னர் மாகாண மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை நடத்தத் திட்டம்!
Local
17 August 2026
GSP+ வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்பத்தை மீளாய்வு செய்ய அமைச்சரவை உபக்குழு நியமனம்!
Local
17 August 2026
குமாரபுரம் படுகொலை வழக்கை மீள விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!
Local
16 August 2026
ரஷ்யா - யுக்ரைன் இடையே தீவிரமடைந்துள்ள வான்வழித் தாக்குதல்கள்: இரு தரப்பிலும் தலா 7 பேர் பலி!
Local
16 August 2026
எல் நினோ தாக்கத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
Local
16 August 2026
தேசிய பூங்காக்களில் நெரிசலைக் குறைக்கவும் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் சஜித் யோசனை!
Local
16 August 2026