இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு வலியுறுத்தியுள்ளார்.
சமீபகாலமாக நாட்டில் இடம்பெறும் தீவிர குற்றச் செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்கு மத்தியில், மரண தண்டனை பற்றிய விவாதம் மீண்டும் மேலெழுந்துள்ள நிலைமையைக் சுட்டிக்காட்டி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தவறான சிறைத்தண்டனையை எதிர்காலத்தில் திருத்த முடியும் என்றும், ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அதனை மீண்டும் மாற்றியமைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னைய வழக்கு ஒன்றில், மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வறிய ஒருவர், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இடம்பெற்ற மறுவிசாரணையில் மரபணு அறிவியல் சான்றுகள் மூலம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தனது அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
எனவே, மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து சிந்திப்பதற்கு முன்னர் பின்வரும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார்:
கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்.
வழக்கு விசாரணைகளில் கண்ணுற்ற சாட்சிகளை மட்டும் நம்பியிருக்காமல் மரபணு (DNA), கைரேகை மற்றும் சடப்பொருட்களின் அறிவியல் சான்றுகளுக்கு முன்னுரிமை அளித்தல்.
வசதியற்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்குத் தகுதியான இலவசச் சட்ட உதவிகளை அரசாங்கம் உறுதி செய்தல்.
போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சாட்சியங்களை சோடித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வது.
விசாரணைக் குறைபாடுகள், சோடிக்கப்பட்ட சாட்சியங்கள் அல்லது நீதித்துறை தவறுகள் காரணமாக ஒரு அப்பாவி தண்டிக்கப்படுவதைத் தடுக்கும் அளவுக்குக் குற்றவியல் நீதித்துறை நம்பகமானதாக உள்ளதா என்பதை ஆராய்வதே தற்போதைய பிரதான தேவையாகும் என்றும், ஒரு மனிதனின் உயிர் பறிக்கப்பட்ட பிறகு அதை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபகாலமாக நாட்டில் இடம்பெறும் தீவிர குற்றச் செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்கு மத்தியில், மரண தண்டனை பற்றிய விவாதம் மீண்டும் மேலெழுந்துள்ள நிலைமையைக் சுட்டிக்காட்டி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தவறான சிறைத்தண்டனையை எதிர்காலத்தில் திருத்த முடியும் என்றும், ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அதனை மீண்டும் மாற்றியமைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னைய வழக்கு ஒன்றில், மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வறிய ஒருவர், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இடம்பெற்ற மறுவிசாரணையில் மரபணு அறிவியல் சான்றுகள் மூலம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தனது அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
எனவே, மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து சிந்திப்பதற்கு முன்னர் பின்வரும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார்:
கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்.
வழக்கு விசாரணைகளில் கண்ணுற்ற சாட்சிகளை மட்டும் நம்பியிருக்காமல் மரபணு (DNA), கைரேகை மற்றும் சடப்பொருட்களின் அறிவியல் சான்றுகளுக்கு முன்னுரிமை அளித்தல்.
வசதியற்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்குத் தகுதியான இலவசச் சட்ட உதவிகளை அரசாங்கம் உறுதி செய்தல்.
போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சாட்சியங்களை சோடித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வது.
விசாரணைக் குறைபாடுகள், சோடிக்கப்பட்ட சாட்சியங்கள் அல்லது நீதித்துறை தவறுகள் காரணமாக ஒரு அப்பாவி தண்டிக்கப்படுவதைத் தடுக்கும் அளவுக்குக் குற்றவியல் நீதித்துறை நம்பகமானதாக உள்ளதா என்பதை ஆராய்வதே தற்போதைய பிரதான தேவையாகும் என்றும், ஒரு மனிதனின் உயிர் பறிக்கப்பட்ட பிறகு அதை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?
Local
17 August 2026
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியைக் குறைக்க அமெரிக்கா தீர்மானம்: ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
Local
17 August 2026
சாப்பிடும் நேரம் தவறினால் உடல் எடை கூடுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
Local
17 August 2026
கஞ்சிபானை இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் அறிவிப்பு!
Local
17 August 2026
ஜெர்மனியின் ஜூலியன் வெபரின் 90.40 மீற்றர் எறிதலால் ருமேஷ் தரங்கவின் முதலிடத்துக்கு சவால்
Local
17 August 2026
இன்று 7 மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை!
Local
17 August 2026
இணையவழி கட்டடப் பொருள் மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை!
Local
17 August 2026
ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா செல்லமாட்டார்: பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!
Local
17 August 2026
எரிபொருள் மானியம் வழங்கப்படாவிடின் விலை அதிகரிக்கப்படும்: வலுசக்தி அமைச்சு எச்சரிக்கை!
Local
17 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை இன்று முதல் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!
Local
17 August 2026