உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளது.
அரசத் தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுத்ததுடன், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் உரிய உரிமைகள் குறித்தும் விளக்கமளித்தது.
அத்துடன், அனைத்துப் பிரதிவாதிகளையும் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்போது, 6 ஆவது பிரதிாவதியான மொஹமட் ரிஸ்வான், தான் சாட்சியமளிக்கப் போவதில்லை எனவும் மௌனம் காக்கப் போவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டதுடன் 584 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளில் சுமார் 1,500 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், ஆவணங்கள், குண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 2,076 நீதிமன்றப் பொருட்கள் அரசுத் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட 10 ஒப்புதல் வாக்குமூலங்களும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன.
இதில் பிரதிவாதி மொஹமட் பிர்தௌஸ் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பின் அடிப்படையில் வழங்கப்படவில்லை எனக் கூறி அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
எவ்வாறாயினும், ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதித்தது.
எவ்வாறாயினும், ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதித்தது.
ஐந்தாண்டு காலப்பகுதியில் 547 நாட்களுக்கு அரசத் தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.
இந்த நிலையில் வழக்கில் அரசத் தரப்பு சார்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா ஆகியோருடன் அரச சட்டவாதிகளும் முன்னிலையாகின்றனர்.
இந்த நிலையில் வழக்கில் அரசத் தரப்பு சார்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா ஆகியோருடன் அரச சட்டவாதிகளும் முன்னிலையாகின்றனர்.
Latest News
பல்லேகலை சிறைச்சாலையில் பரபரப்பு: ஆசனவாயில் 'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த கைதி சிக்கினார்!
Local
17 August 2026
கின்னஸ் சான்றளித்த உலகின் மிக உயரமான 10 பெண்களின் பட்டியல் வெளியீடு!
Local
17 August 2026
முப்படை ஆராய்ச்சி அமைப்புகளையும் இணைத்து ஒரே தேசிய மையம்: ஜனாதிபதி யோசனை!
Local
17 August 2026
விரைவில் இலங்கை மக்கள் விருப்பமான வாகனங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்: விஜித ஹேரத் உறுதி!
Local
17 August 2026
ஆண்டின் இறுதிக்குள் 'எல் நினோ' தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
17 August 2026
1 பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்
Local
17 August 2026
கடந்த 16 நாட்களில் 6,900க்கும் அதிகமானோருக்கு டெங்கு: கம்பஹாவில் உச்சகட்ட அச்சுறுத்தல்!
Local
17 August 2026
உட்பூசல்களாலேயே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததாக குற்றச்சாட்டு!
Local
17 August 2026
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!
Local
17 August 2026
கஞ்சாவை பறிமுதல் செய்து உலர்த்தக் கொடுத்த காவல்துறை: நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிரடி கைது நடவடிக்கை!
Local
17 August 2026