எரிபொருள் இறக்குமதிக்காகத் தற்போது மேற்கொள்ளப்படும் செலவினங்கள் மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்திடம் புதிய மானியத்தைக் கோருவதற்கு அல்லது விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கு வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
உலகச் சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றம் இறக்குமதிச் செலவை நேரடியாகப் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இதுகுறித்த மீளாய்வை மேற்கொள்வது அவசியமானது எனக் தெரிவித்துள்ளார்.
இந்த மீளாய்வுக்குப் பின்னர், அரசாங்கத்தினால் முன்னர் வழங்கப்பட்டுப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் கோரவுள்ளதாகவும், அல்லது நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விலைத் திருத்தம் போன்ற மாற்று வழிகளை நாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, அது ஜூலை மாதம் அமுலுக்கு வந்த போதிலும், நடப்பு மாதத்தில் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய கிழக்கு போர் வெடித்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் விலைகள் தற்போது 48 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அத்துடன் காப்புறுதி தவணைக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியா, சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கை எரிபொருளைப் பெற்றபோதிலும், தொடர்ந்து அதிகரிக்கும் உலகச் சந்தை விலை பெரும் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
பல்கலைக்கழக மாணவர் தெரிவு நிறைவு – பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிப்பு
Local
10 September 2026
முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் - பிணையில் செல்வதற்கு அனுமதி
Local
10 September 2026
சினிமாவை மிஞ்சிய நிஜ வாழ்க்கை நாடகம் : ரவி மோகனை விளாசிய ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு!
Local
10 September 2026
பிற்பகல் 2 மணிக்குப் பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
Local
10 September 2026
தந்தி வழிப் பணப் பரிமாற்றம்: அமெரிக்க டொலர்ளை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர் மருதானையில் கைது
Local
10 September 2026
"இன்றைக்கும் தழும்புகள் இருக்கு..." : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!
Local
10 September 2026
பொலன்னறுவையில் கோர விபத்து : கால்வாயில் கவிழ்ந்த பேருந்து - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Local
10 September 2026
நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்
Local
10 September 2026
மத்திய கிழக்கில் தற்போது என்ன நடக்கிறது? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
10 September 2026
களுபோவில வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு!
Local
10 September 2026