பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நாட்டுக்குத் திருப்பி ஒப்படைக்கும் வரை, பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ள மாட்டார் என பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றுள்ள ஹசீனாவுக்கு பங்களாதேஷில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் திரும்ப ஒப்படைக்குமாறு டாக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எதிர்வரும் வாரம் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா செல்லக்கூடும் என வெளியாகும் ஊடகச் செய்திகள் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஏ.கே.எம். ஷாஹிதுல் கரீம், இத்தகைய விஜயத்திற்குப் பொருத்தமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.
இதற்காக, ஷேக் ஹசீனா மற்றும் ஏனைய குற்றவாளிகளை விரைவாக நாடுகடத்துமாறு இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியாவில் இருந்தவாறு ஹசீனா ஊடகங்களுக்கு அளித்து வரும் பகிரங்கப் பேட்டிகள் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைச் சூழலைப் பாதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
கடந்த பெப்ரவரி மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற தாரிக் ரஹ்மான், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்லாமல் மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார்.
இதேவேளை, பங்களாதேஷ் சமர்ப்பித்துள்ள நாடுகடத்தல் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பங்களாதேஷ் சமர்ப்பித்துள்ள நாடுகடத்தல் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
Local
24 August 2026
வெப்ப அலைகளின் தாக்கம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
Local
24 August 2026
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை: தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
Local
24 August 2026
தனியார் துறை ஊழியர்களுக்கான இணையவழி தொடருந்து பருவச்சீட்டு முறைமை அறிமுகம்
Local
24 August 2026
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்த நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Local
24 August 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026
தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் மகன் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது!
Local
23 August 2026
அளுத்கமவில் தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்!
Local
23 August 2026
‘Diamond Excellence விருதுகள் 2026 - ஹிரு ஊடகப் வலையமைப்புக்கு பல விருதுகள்!
Local
23 August 2026