தணமல்வில, தெமோதர வௌ பகுதியில் உள்ள கஞ்சா தோட்டமொன்றை முற்றுகையிட்டு, அதன் உரிமையாளரிடம் 5 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்ததாகக் கூறப்படும் மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 4 காவல்துறை அதிகாரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி குறித்த கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட 6 பேர் கொண்ட காவல்துறை குழு, கஞ்சா பயிர்களில் ஒரு சிறு பகுதியை மாத்திரம் அழித்துவிட்டு, எஞ்சிய கஞ்சா பயிர்களை எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை உலர்த்துவதற்காக ‘களு’ என அழைக்கப்படும் நபரிடம் ஒப்படைத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி தணமல்வில தலைமையக காவல்துறை பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கஞ்சா தோட்ட உரிமையாளரும், அரச புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கஞ்சாவை உலர்த்தியதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நீதிமன்ற தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர், இரண்டு காவல்துறை சார்ஜன்ட்கள், ஒரு சாரதி மற்றும் ஒரு காவல்துறை கொன்ஸ்டபிள் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்
Latest News
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!
Local
20 August 2026
மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த
Local
20 August 2026
22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
Local
20 August 2026
22 ஆவது திருத்தம்: நீதிமன்றம் தீர்மானித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
20 August 2026
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!
Local
20 August 2026
நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கம் விளக்கம் - சிக்கல்களை நீக்க கோருகிறார் சாணக்கியன்
Local
20 August 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அடுத்த மாதம் சோதனையோட்டம் ஆரம்பம்!
Local
20 August 2026
கல்கிசை துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது
Local
19 August 2026
செர்பியாவில் எரியும் காட்டுத்தீயினை அணைக்க அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பினார் புடின்!
Local
19 August 2026
35 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கெடுப்பு மூலம் தேர்வு!
Local
19 August 2026