ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்னவைத் தலா 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (18) அனுமதியளித்தார்.
அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் 2010 - 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மீன் விற்பனை நிலையங்களை அமைத்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளின் போது, உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு அந்தப் பணிகளுக்கான அனுமதியை வழங்கியமை தொடர்பிலேயே சந்தேகநபருக்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
குறித்த இரு நிறுவனங்களுக்கும் பணிகளை வழங்குவதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, பொறுப்பேற்கச் செய்தமையின் மூலம் 'ஊழல்' குற்றத்தைச் புரிந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் மேலும் தெரிவித்தது.
கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்ட பின்னரே நீதிமன்றம் சந்தேகநபருக்கு பிணையில் செல்ல அனுமதியை வழங்கியது.
அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் 2010 - 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மீன் விற்பனை நிலையங்களை அமைத்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளின் போது, உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு அந்தப் பணிகளுக்கான அனுமதியை வழங்கியமை தொடர்பிலேயே சந்தேகநபருக்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
குறித்த இரு நிறுவனங்களுக்கும் பணிகளை வழங்குவதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, பொறுப்பேற்கச் செய்தமையின் மூலம் 'ஊழல்' குற்றத்தைச் புரிந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் மேலும் தெரிவித்தது.
கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்ட பின்னரே நீதிமன்றம் சந்தேகநபருக்கு பிணையில் செல்ல அனுமதியை வழங்கியது.
Latest News
சமூக ஊடக விளம்பரத்துக்காக நெடுஞ்சாலையில் தவறான பாதையில் பயணம் செய்து உயிரிழந்த இளைஞர்கள்!
Local
20 August 2026
இந்தியருக்கு பிணை வழங்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
Local
20 August 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
20 August 2026
ட்ரம்ப் அறிவிப்பு: ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான பொருளாதாரத் நடவடிக்கை
Local
20 August 2026
விசா விண்ணப்பங்கள் குறித்து அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!
Local
20 August 2026
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
Local
20 August 2026
இலங்கை சுங்கத்தின் பாரிய மோசடி - நண்பரை பாதுகாக்கிறாரா ஜனாதிபதி?
Local
20 August 2026
பாகிஸ்தானில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர்!
Local
20 August 2026
உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!
Local
20 August 2026
வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!
Local
20 August 2026