General19 August 2026

2028-க்குப் பின் கடன்களைச் செலுத்த இலங்கை மேலும் 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டும்: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் வரும் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், 2028-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை மீண்டும் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய "யுத தெக்கட உர தீ" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிலையில் 2028-க்குப் பிறகு கடன்களை மறுசெலுத்துகை செய்ய இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.

எனினும், இந்த வருட முடிவில் மத்திய வங்கி 8 பில்லியன் டொலர்கள் கையிருப்பை மட்டுமே எதிர்பார்க்கிறது. இதன் காரணமாக, மேலும் 6 பில்லியன் டொலர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, அந்த 6 பில்லியன் டொலர்களைத் திரட்டுவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes