General19 August 2026

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11ஆவது கட்டத்திற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, மூன்று பாடங்களிலும் குறைந்தது சாதாரண சித்தி (S) பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சை அல்லது சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தது சாதாரண சித்தி (S)பெற்றிருக்க வேண்டும்.

பொதுச் சாதாரணப் பரீட்சையில் குறைந்தபட்சம் 30 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதியளவில் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வர்த்தகம், மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 16 அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 129க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புத் திட்டங்களை பயில்வதற்கு மாணவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes