தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 30 வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று, நேற்று (18) உயிரிழந்துள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்பதற்கு முன்னர் குறித்த ஒட்டகச்சிவிங்கிக்கு எந்தவித நோய்களும் பதிவாகியிருக்கவில்லை.
இதனால் வயது முதிர்வு காரணமாகவே இது இயற்கையாக உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக இன்று (19) பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
காடுகளில் வாழும் ஒட்டகச்சிவிங்கிகள் வழக்கமாக 20 முதல் 25 ஆண்டுகள் வரை மட்டுமே வாழக்கூடியவை. எனினும், மிருகக்காட்சிசாலைகளில் முறையான பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதால் அவை நீண்ட காலம் வாழ வாய்ப்புள்ளது.
தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு புதிய ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளை இலங்கைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!
Local
20 August 2026
வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!
Local
20 August 2026
அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!
Local
20 August 2026
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!
Local
20 August 2026
மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த
Local
20 August 2026
22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
Local
20 August 2026
22 ஆவது திருத்தம்: நீதிமன்றம் தீர்மானித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
20 August 2026
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!
Local
20 August 2026
நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கம் விளக்கம் - சிக்கல்களை நீக்க கோருகிறார் சாணக்கியன்
Local
20 August 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அடுத்த மாதம் சோதனையோட்டம் ஆரம்பம்!
Local
20 August 2026