நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவசர நிலைமைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சிறைச்சாலை நெருக்கடிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதுடன், கைதிகளின் நலன்புரி மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
பிரதேச அரச அதிகாரிகளின் தலைமையில் அமைக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த குழுக்கள், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை கூடி நிலவரங்களை ஆராயவுள்ளன.
காவல்துறை, இராணுவம், காவல்துறை விசேட அதிரடிப்படை, நீர் வழங்கல் சபை, மின்சார சபை, சுகாதாரத் துறை மற்றும் தீயணைப்புப் பிரிவு உள்ளிட்ட பல துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தப் பொறிமுறையில் இணைக்கப்படவுள்ளன.
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக களுத்துறை, காலி, பூஸ்ஸ மற்றும் மாத்தறை ஆகிய சிறைச்சாலைகளை மையப்படுத்தி ஒருங்கிணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்களது புகார்களைத் தெரிவிப்பதற்குப் புதிய பயனுள்ள முறைமையொன்று உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Latest News
நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கம் விளக்கம் - சிக்கல்களை நீக்க கோருகிறார் சாணக்கியன்
Local
20 August 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அடுத்த மாதம் சோதனையோட்டம் ஆரம்பம்!
Local
20 August 2026
கல்கிசை துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது
Local
19 August 2026
செர்பியாவில் எரியும் காட்டுத்தீயினை அணைக்க அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பினார் புடின்!
Local
19 August 2026
35 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கெடுப்பு மூலம் தேர்வு!
Local
19 August 2026
செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
Local
19 August 2026
செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் - விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!
Local
19 August 2026
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிரக்ஞானந்தா!
Local
19 August 2026
அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம்!
Local
19 August 2026
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: பாபர் அசாம் இன்றி களமிறங்கிய பாகிஸ்தான்!
Local
19 August 2026