General20 August 2026

22 ஆவது திருத்தம்: நீதிமன்றம் தீர்மானித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமென உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், அதனையும் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைய, நாடாளுமன்ற ஒப்புதல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு என இரண்டில் எதனையும் எதிர்கொள்ள அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது முற்றிலும் பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டே கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீர்திருத்தச் செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes