இந்திய நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருவருக்கு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவருக்குப் பிணை வழங்குவதற்காகப் பணம் பெற்றது, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹ_சைன் மொஹமத் மற்றும் ஹசித் மொஹமத் ஆகிய இருவர் மீதே நீண்ட விசாரணையின் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் தரப்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை.
இதன்போது. தமக்கு நீதி வழங்குமாறு அவர்கள் கோரியதுடன், தனக்கு ஒரு சிறிய குழந்தை உள்ளதையும் கருத்தில் கொள்ளுமாறு முதலாவது சந்தேகநபர் கோரிக்கை விடுத்தார்.
எனினும்,பணத்திற்காகப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிணை வழங்குவோருக்கு சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் வகையில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மோசடி விசாரணைப் பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரினர்.
இந்தநிலையில், சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்திற்கொண்ட பிரதான நீதிவான், இரு குற்றவாளிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். எனினும், குற்றவாளிகள் ஏற்கனவே ஆறு மாதங்கள் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியை அவர்களது தண்டனைக்காலத்திலிருந்து கழித்துக் கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.
Latest News
2026 இறுதிக்குள் 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அடைய முடியும் – நிதி பிரதி அமைச்சர்
Local
21 August 2026
இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுநராக ஹஷான் திலகரத்ன நியமனம்
Local
21 August 2026
மட்டக்களப்பில் நாளை முதல் தினமும் 4 மணிநேரம் நீர் விநியோகத் தடை: நீர்வழங்கல் சபை அறிவிப்பு!
Local
21 August 2026
அதிபரை 27 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவர்கள் - விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்
Local
21 August 2026
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
Local
21 August 2026
"மொத ராத்திரி" திரைப்படம் குறித்து பாராட்டிய நடிகர் சூரி
Local
21 August 2026
2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!
Local
21 August 2026
யாழில் வாணவேடிக்கை : கண் பாதிக்கப்பட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
21 August 2026
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து: நஷ்டஈடு பெறுவதன் தற்போதைய நிலவரம் குறித்து சஜித் கேள்வி
Local
21 August 2026
வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு!
Local
21 August 2026