நாட்டின் சிறுவர் பாதுகாப்பு, சட்டத் திருத்தங்கள், கல்வி மறுசீரமைப்பு மற்றும் மாணவர்களின் மனநலன் சார்ந்த நலன்புரித் திட்டங்கள் குறித்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றப்பட்டது.
இந்த சிறப்புரையில் உரையாற்றப்பட்ட விடயங்களாக,
நாட்டின் தற்போதைய சட்ட அமைப்பில் ‘சிறுவர்’ என்பதற்கான வயது வரையறை வெவ்வேறு சட்டங்களில் 14, 16 மற்றும் 18 என மாறுபடுவதால் ஏற்படும் இடைவெளிகளைக் களைந்து, சிறுவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய சட்டத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், குறிப்பாக ஆண் மாணவர்கள்ள கட்டாயக் கல்வியைத் தாண்டி பாடசாலையிலிருந்து விலகும் போக்கைக் கட்டுப்படுத்தி, 13 வருட பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வதை உறுதிசெய்யும் வகையில் 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டில் 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும், ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டில் 1,200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக 2025இல் மாதிரித் திட்டமாகத் தொடங்கப்பட்ட 'C2 மையங்கள்', 2026ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் விரிவுபடுத்தப்படவுள்ளன.
பாடசாலை வாகனங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்புத் தரநிலைகளாக ஆசனப்பட்டி , பாதுகாப்பு கெமராக்கள் மற்றும் சாரதிகளுக்கான பயிற்சிகளைப் போக்குவரத்து அமைச்சு கட்டாயமாக்கியுள்ளது. அத்துடன், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மாணவர்களுக்குச் சத்தான உணவு வழங்வதும் உறுதிசெய்யப்படும்.
விடுமுறைக் காலம் என்பது மாணவர்களின் மன அமைதிக்கு மிகவும் அவசியமானது என்பதால், அந்தக் காலப்பகுதியில் மாணவர்களுக்கு அளவுக்கு அதிகமான வீட்டுப் பணிகளை வழங்கி அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு என்பது வெறும் கல்வித் துறையோடு மட்டும் முடிந்துவிடாமல் சமூகம், போக்குவரத்து மற்றும் குடும்பப் பின்னணி உள்ளடங்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்த சிறப்புரையில் உரையாற்றப்பட்ட விடயங்களாக,
நாட்டின் தற்போதைய சட்ட அமைப்பில் ‘சிறுவர்’ என்பதற்கான வயது வரையறை வெவ்வேறு சட்டங்களில் 14, 16 மற்றும் 18 என மாறுபடுவதால் ஏற்படும் இடைவெளிகளைக் களைந்து, சிறுவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய சட்டத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், குறிப்பாக ஆண் மாணவர்கள்ள கட்டாயக் கல்வியைத் தாண்டி பாடசாலையிலிருந்து விலகும் போக்கைக் கட்டுப்படுத்தி, 13 வருட பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வதை உறுதிசெய்யும் வகையில் 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டில் 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும், ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டில் 1,200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக 2025இல் மாதிரித் திட்டமாகத் தொடங்கப்பட்ட 'C2 மையங்கள்', 2026ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் விரிவுபடுத்தப்படவுள்ளன.
பாடசாலை வாகனங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்புத் தரநிலைகளாக ஆசனப்பட்டி , பாதுகாப்பு கெமராக்கள் மற்றும் சாரதிகளுக்கான பயிற்சிகளைப் போக்குவரத்து அமைச்சு கட்டாயமாக்கியுள்ளது. அத்துடன், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மாணவர்களுக்குச் சத்தான உணவு வழங்வதும் உறுதிசெய்யப்படும்.
விடுமுறைக் காலம் என்பது மாணவர்களின் மன அமைதிக்கு மிகவும் அவசியமானது என்பதால், அந்தக் காலப்பகுதியில் மாணவர்களுக்கு அளவுக்கு அதிகமான வீட்டுப் பணிகளை வழங்கி அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு என்பது வெறும் கல்வித் துறையோடு மட்டும் முடிந்துவிடாமல் சமூகம், போக்குவரத்து மற்றும் குடும்பப் பின்னணி உள்ளடங்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
Latest News
அமெரிக்காவும் கனடாவும் வர்த்தக ஒப்பந்தத்துக்கு தயாராகின்றன.
Local
21 August 2026
அல்பேர்ட்டா மாகாணத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அடுத்த 60 நாட்கள்!
Local
21 August 2026
சீனாவில் பொதி செய்யும், தரம் பிரிக்கும் மனித ரோபோக்கள்!
Local
21 August 2026
நைஜீரியாவில் சோகம்: படகு விபத்தில் சிறுவர்கள் உட்பட்ட 40 பேர் பலி!
Local
21 August 2026
தந்தையின் மறைவுக்கு பின்னர், முதல் கோலை பெற்ற மெஸ்ஸி!
Local
21 August 2026
கால்பந்து உலக தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிராந்திய கூட்டமைப்புகள் ஆலோசனை!
Local
21 August 2026
காஷ்மீர் குறித்து அமெரிக்கத் தூதரின் கருத்து: பாகிஸ்தான் கண்டனம்!
Local
21 August 2026
அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் முதல் முறையாக 40 டொலர் டிரில்லியனைக் கடந்தது!
Local
21 August 2026
அமெரிக்காவின் புதிய போர்க்கப்பல் அரபிக்கடலை சென்றடைந்தது!
Local
21 August 2026
நந்தா மாலனியின் மறைவு :மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு!
Local
20 August 2026