நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவு, நீதித்துறை மீதான செல்வாக்கை அதிகரிப்பதற்கும், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாக இருக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்குமே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவர முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை அதிகரிப்பதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, இது தொடர்பாக இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த முழுமையான விபரங்களை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்தார்.
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை நிலவுவதாகவும், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கும் நாமல் ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
Latest News
தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவா? – ஜி.வி.பிரகாஷின் அதிரடி பதில்!
Local
20 August 2026
ஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை – வழக்கு செப்டம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
20 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு – நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டு
Local
20 August 2026
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க கோரிக்கை!
Local
20 August 2026
சாணக்கியனின் கேள்விக்கு ஒரு வாரத்தில் தீர்வு - சுகாதார அமைச்சர் உறுதி!
Local
20 August 2026
அரச ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் – சாணக்கியன் இராசமாணிக்கம்
Local
20 August 2026
சிறுவர் பாதுகாப்பு ,கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்புகள்!
Local
20 August 2026
ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம்... எதிர்க்கட்சிக்கு இன்னொரு நியாயமா? சஜித் அதிருப்தி
Local
20 August 2026
தமன்னா ஏற்படுத்திய தாக்கத்தை தக்கவைப்பாரா பூர்ணா?
Local
20 August 2026
சிறுவர் வேலைவாய்ப்புத் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு: தண்டனைகளும் அபராதங்களும் உயர்வு
Local
20 August 2026