கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் தாதியர்கள், தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணிக்கு வந்தபோது, அங்குள்ள சில ஊழியர்களால் தடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.
ஏனைய அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் மாத்திரம் ஏன் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
தாதியர்களின் மத நம்பிக்கைகளையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், குறித்த சம்பவம் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஆடை தொடர்பான பழைய சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்து, தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் உடனடியாக புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து சமூகங்களினதும் மத உணர்வுகள், உரிமைகள் மற்றும் ஆடை அணியும் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நியாயமான அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளும் உறுதி செய்யப்படுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.
ஏனைய அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் மாத்திரம் ஏன் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
தாதியர்களின் மத நம்பிக்கைகளையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், குறித்த சம்பவம் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஆடை தொடர்பான பழைய சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்து, தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் உடனடியாக புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து சமூகங்களினதும் மத உணர்வுகள், உரிமைகள் மற்றும் ஆடை அணியும் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நியாயமான அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளும் உறுதி செய்யப்படுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.
Latest News
அமெரிக்காவும் கனடாவும் வர்த்தக ஒப்பந்தத்துக்கு தயாராகின்றன.
Local
21 August 2026
அல்பேர்ட்டா மாகாணத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அடுத்த 60 நாட்கள்!
Local
21 August 2026
சீனாவில் பொதி செய்யும், தரம் பிரிக்கும் மனித ரோபோக்கள்!
Local
21 August 2026
நைஜீரியாவில் சோகம்: படகு விபத்தில் சிறுவர்கள் உட்பட்ட 40 பேர் பலி!
Local
21 August 2026
தந்தையின் மறைவுக்கு பின்னர், முதல் கோலை பெற்ற மெஸ்ஸி!
Local
21 August 2026
கால்பந்து உலக தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிராந்திய கூட்டமைப்புகள் ஆலோசனை!
Local
21 August 2026
காஷ்மீர் குறித்து அமெரிக்கத் தூதரின் கருத்து: பாகிஸ்தான் கண்டனம்!
Local
21 August 2026
அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் முதல் முறையாக 40 டொலர் டிரில்லியனைக் கடந்தது!
Local
21 August 2026
அமெரிக்காவின் புதிய போர்க்கப்பல் அரபிக்கடலை சென்றடைந்தது!
Local
21 August 2026
நந்தா மாலனியின் மறைவு :மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு!
Local
20 August 2026